"Education is the most powerful weapon you can use to change
the world” - Nelson Mandela
ம் ம் ம் ம் ம் ம் ம் இதெல்லாம் இந்தியாவுக்கு சாத்தியப்படாது என்பது உண்மையாகிறது.
சென்ற மாதம், சென்னை, அண்ணா நகரில் காரில் சென்றுகொண்டிருக்கும் போது, பின்னால் ஒருவர் சும்மாவே அவரது காரில் ஹாரன் அடித்துகொண்டே வந்தார். எனக்கு வந்த கோபத்தில் ஏனய்யா இப்படி என்று கேட்டதுக்கு எனது கார், எனது ஹாரன் அப்படித்தான் அடிப்பேன் என்றார் அந்த மானம் கெட்ட படித்த முட்டாள். (இள வயதுக்காரரும் இல்லை) அரசு இங்கே ஹாரன் அடிக்கக்கூடாது என்று சில பகுதிகளில் குறிப்பிட்டு இருக்கும். அப்படி என்றால் அப்படி சொல்ல அரசுக்கு உரிமை இல்லையா? இவர்கள் மருத்துவமனை, பள்ளிகூடங்கள் பகுதியிலும் இப்படித்தான் இருப்பார்களா? அது இருக்கட்டும். இவர் மனைவிதான் என்பதால் சாலையில் எல்லோரும் பார்க்க குடும்பம் நடத்துவாரோ? இந்தியாவின் பல பகுதிகளில் இப்படித்தான் நடக்கிறது. இந்த அறிவுக் கொழுந்துகளும் ஓட்டு போட்டு நமது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு விதத்தில் படிக்காதவர்கள் இவர்களுக்கு மேல் என்று தோன்றுகிறது..
ரகுபதி ராகவ ராஜாராம்......
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி.....
No comments:
Post a Comment