"பந்த்'தில் அடக்கி வாசித்த அ.தி.மு.க.,: காரணம் என்ன?
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சமீபத்தில் தேசிய அளவில் "பாரத் பந்த்' நடத்தின. தமிழகத்தில், அ.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தமிழக அரசு, பந்த் பிசுபிசுத்தது என்று கூறி உள்ள நிலையில், எதிர்கட்சிகள் இந்த பந்த் முழு வெற்றியை தந்துள்ளது என்று கருதுகின்றன.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆளும் தி.மு.க.,விற்கு நிச்சயம் சங்கடத்தை கொடுக்கும். எனவே, இந்த நேரத்தில் பந்த் நடத்தி, எதிர்கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்படுத்தினால் மக்களிடையே தனது கட்சிக்கு செல்வாக்கு கூடும்; ஒரு வலுவான எதிர்கட்சி கூட்டணியை ஏற்படுத்தி விடலாம் என்று கணக்கு போட்டே அ.தி.மு.க., இந்த பந்த்தில் கலந்து கொண்டது. மேலும், மற்ற கட்சிகளும் இந்த பந்த்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க., அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், தே.மு.தி.க.,- பா.ம.க., ஆகிய கட்சிகள் இந்த பந்த்தில் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலம், ஒரு வலுவான கூட்டணி ஏற்படுத்த வேண்டும் என்று பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்த அ.தி.மு.க.,விற்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.
எதிர்கட்சிகளிடையே இன்னும் ஒற்றுமை ஏற்படவில்லை என்பதையே இந்த பந்த் சுட்டிக் காட்டுகிறது. இந்நிலையில், தே.மு.தி.க.,வும், பா.ம.க.,வும் பந்தில் கலந்து கொள்ளாததன் காரணமாக, இவை எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எந்த மாதிரியான ஒரு முடிவை எடுக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பா.ம.க.,வை பொருத்தவரையில், தி.மு.க.,வுடன் இணைந்து வரும் சட்டசபைத் தேர்தலை சந்திக்க நினைக்கிறது. "உடனடி லாபம்' என்ற தனது கொள்கைப்படி பார்த்தால், பந்தில் பங்கேற்பதில் உடனடி பலன் ஏதும் கிடைக்கப் போவதில்லை என பா.ம.க., கருதியது; இதனால், பங்கேற்காமல் ஒதுங்கியது.
தே.மு.தி.க.,வை பொருத்த வரையில், வரும் தேர்தலில் எத்தனை இடங்களை அ.தி.மு.க., அளிக்கும் என்பதில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தால், சலன நிலையில் காணப்படுகிறது. காங்கிரசோடு கை கோர்க்கலாம் என்ற கனவும் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் பந்தில் பங்கேற்பதால், எதிர்கால கணக்குகள் மாறிவிடும் என்ற நோக்கில் தே.மு.தி.க.,வும் மவுனம் சாதித்துள்ளது. இந்த இரு கட்சிகளும் ஆதரவு தராததாலோ என்னவோ, பந்த் தினத்தன்று அ.தி.மு.க., அடக்கி வாசித்தது. தமிழகத்தில் பந்த் தினத்தன்று, பா.ஜ., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே போராட்ட களத்தில் குதித்தன.
இக்கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் நேரடியாக போராட்டக் களத்திற்கு வந்து கைதாயினர். ஆனால், அ.தி.மு.க.,- ம.தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சிகள் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததே தவிர, முழுமையாக களத்தில் இறங்க முன்வரவில்லை. பந்த் போராட்டத்திற்கு, அகில இந்திய அளவில் பா.ஜ., முன்னிலை வகிக்கும் போது, தமிழகத்தில் அக்கட்சியுடன் இணைந்து அ.தி.மு.க., போராட்டத்தை நடத்தினால், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்து விட்டது என்ற விமர்சனத்துக்கு வழிவகுக்கும் என்று அ.தி.மு.க., கருதியது.
அ.தி.மு.க.,வை பொருத்தவரையில், கூட்டணிக் கதவை திறந்து வைத்திருக்கிறது. காங்கிரஸ், தே.மு.தி.க., போன்ற கட்சிகளுடன் கைகோர்க்கவும், அ.தி.மு.க., தயாராகவுள்ளது. எனவே, பா.ஜ.,வுடன் இணைந்து, போராட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை. அ.தி. மு.க.,வின் இரண்டாம் கட்டத்தலைவர்களும் மறியல் போராட்டங்களில் பங்கேற்க முன்வரவில்லை. அ.தி.மு.க., - ம.தி.மு.க., வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்து 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க ஆளுங்கட்சி திட்டமிட்டிருந்தது. இதை உணர்ந்ததால், அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் இறங்கவில்லை என்ற காரணமும் கூறப்படுகிறது. மொத்தத்தில், பந்த்தில் பங்கேற்ற, பங்கேற்காத அரசியல் கட்சிகள், பொதுமக்களின் பாதிப்பை பற்றி கவலைப்பட்டதோ, இல்லையோ, தங்களது எதிர்காலத்தை பற்றி ரொம்பவும் கவலைப்பட்டது "பந்த்' தினத்தன்று வெளிப்படையாக தெரிந்தது.
-நமது சிறப்பு நிருபர்-
இது இன்றைய தினமலர் செய்தி.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=36708
இதே தினமலர் தான் பந்துக்கு முன் எதிர் கட்சிகள் ஒற்றுமை. ஓரணியில் சேர்ந்து பந்த் நடத்துகின்றன என்று செய்தி வெளியிட்டது. இதுதான் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கலையோ? வாழ்க நமது பத்திரிக்கை சுதந்திரம்.
இதற்கு பன்றிகள் எவ்வளவோ மேல்.
Saturday, July 10, 2010
Monday, June 28, 2010
ஹெட் லைட்டை லோ பீமில் போடுவதே இல்லை
நானும் ரொம்ப காலமா கவனிக்கிறேன், நம்ம ஊர்லே படிச்சவன் படிக்காதவன் எல்லோருமே கார், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெட் லைட்டை லோ பீமில் போடுவதே இல்லை. நகர சாலைகளில் லோ பீம் இல் தான் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற விதி படிக்காதவனுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். (ஓட்டுனர் உரிமத்தை நாம் காசு கொடுத்து வாங்கும் வரை இப்படித்தான் இருக்கும்) நன்றாக படித்து லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் அறிவு ஜீவிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள். நானும் பலமுறை டிம் டிப் போட்டுக்காட்டி வெறுத்து போய் ஹை பீம்லியே வாகனத்தை ஓட்ட ஆரம்பித்து விட்டேன். ஊரோடு ஒத்து வாழ்வதென்பது இதுதானோ? நல்ல நாடு நல்ல மாக்கள் சாரி மக்கள். இன்னும் 100 ஆண்டுகள் சென்றாலும் நாம் திருந்துவோமா என்பது சந்தேகமே.
Sunday, June 27, 2010
Education is the most powerful weapon
"Education is the most powerful weapon you can use to change
the world” - Nelson Mandela
ம் ம் ம் ம் ம் ம் ம் இதெல்லாம் இந்தியாவுக்கு சாத்தியப்படாது என்பது உண்மையாகிறது.
சென்ற மாதம், சென்னை, அண்ணா நகரில் காரில் சென்றுகொண்டிருக்கும் போது, பின்னால் ஒருவர் சும்மாவே அவரது காரில் ஹாரன் அடித்துகொண்டே வந்தார். எனக்கு வந்த கோபத்தில் ஏனய்யா இப்படி என்று கேட்டதுக்கு எனது கார், எனது ஹாரன் அப்படித்தான் அடிப்பேன் என்றார் அந்த மானம் கெட்ட படித்த முட்டாள். (இள வயதுக்காரரும் இல்லை) அரசு இங்கே ஹாரன் அடிக்கக்கூடாது என்று சில பகுதிகளில் குறிப்பிட்டு இருக்கும். அப்படி என்றால் அப்படி சொல்ல அரசுக்கு உரிமை இல்லையா? இவர்கள் மருத்துவமனை, பள்ளிகூடங்கள் பகுதியிலும் இப்படித்தான் இருப்பார்களா? அது இருக்கட்டும். இவர் மனைவிதான் என்பதால் சாலையில் எல்லோரும் பார்க்க குடும்பம் நடத்துவாரோ? இந்தியாவின் பல பகுதிகளில் இப்படித்தான் நடக்கிறது. இந்த அறிவுக் கொழுந்துகளும் ஓட்டு போட்டு நமது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு விதத்தில் படிக்காதவர்கள் இவர்களுக்கு மேல் என்று தோன்றுகிறது..
ரகுபதி ராகவ ராஜாராம்......
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி.....
the world” - Nelson Mandela
ம் ம் ம் ம் ம் ம் ம் இதெல்லாம் இந்தியாவுக்கு சாத்தியப்படாது என்பது உண்மையாகிறது.
சென்ற மாதம், சென்னை, அண்ணா நகரில் காரில் சென்றுகொண்டிருக்கும் போது, பின்னால் ஒருவர் சும்மாவே அவரது காரில் ஹாரன் அடித்துகொண்டே வந்தார். எனக்கு வந்த கோபத்தில் ஏனய்யா இப்படி என்று கேட்டதுக்கு எனது கார், எனது ஹாரன் அப்படித்தான் அடிப்பேன் என்றார் அந்த மானம் கெட்ட படித்த முட்டாள். (இள வயதுக்காரரும் இல்லை) அரசு இங்கே ஹாரன் அடிக்கக்கூடாது என்று சில பகுதிகளில் குறிப்பிட்டு இருக்கும். அப்படி என்றால் அப்படி சொல்ல அரசுக்கு உரிமை இல்லையா? இவர்கள் மருத்துவமனை, பள்ளிகூடங்கள் பகுதியிலும் இப்படித்தான் இருப்பார்களா? அது இருக்கட்டும். இவர் மனைவிதான் என்பதால் சாலையில் எல்லோரும் பார்க்க குடும்பம் நடத்துவாரோ? இந்தியாவின் பல பகுதிகளில் இப்படித்தான் நடக்கிறது. இந்த அறிவுக் கொழுந்துகளும் ஓட்டு போட்டு நமது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு விதத்தில் படிக்காதவர்கள் இவர்களுக்கு மேல் என்று தோன்றுகிறது..
ரகுபதி ராகவ ராஜாராம்......
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி.....
Saturday, June 19, 2010
நாமும் நம் நாடும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது
நேற்று சென்னையில் சாலையில் போய் கொண்டு இருக்கும் போது எக்மோர் பாலத்தில் ஒரு ஆட்டோவிலிருந்து தெர்மொ கப் ஒன்று சாலையில் வந்து விழுந்தது. கொஞ்சம் வேகம் எடுத்து ஒரு ஆர்வக் கோளாரில் யார் என்று பார்க்கலாம் என்று ஆட்டோவை கடந்தேன். அதில் அருகில் உள்ள ஒரு நல்ல உயர்ந்த ஆங்கில பள்ளியின் மாணவர்கள் 4/5 பேர். இவர்கள் பின்னர் அண்ணா பல்கலைகழகத்திலேயோ, ஐ ஐ டியிலோ படித்து விட்டு அமெரிக்கா போய் விட்டு இந்தியாவா அசிங்கமான நாடு நாங்கள் அங்கேயெல்லாம் வரமாட்டோம், எங்கள் பிள்ளைகள் கெட்டு போய் விடுவார்கள் என்று கதை பேசுவார்கள். இவர்களுக்கு பள்ளிகளிலும் சுத்தம் சுகாதாரம் கற்றுத் தருவதில்லை. வெறும் புத்தக பூச்சியாக்கி அனுப்பி வைக்கிறார்கள். இதையெல்லாம் நினைத்து பார்க்க யாருக்கு நேரமிருக்கு?
நாமும் நம் நாடும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பது விளங்காத புதிராக இருக்கிறது. நாம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் அரசியல்வாதிகள் சிறப்புடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நாட்டை பற்றி எந்த கவலையும் இல்லை. நம்மைப் போன்ற பொது மக்களும் நமக்கென்ன என்று இருந்தால் அடுத்து சீனாக் காரன் நம் நாட்டை பிடித்தாலும் கேக்க ஆள் இருக்காது. அன்பர்களே இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது நிச்சயமாக நடக்கத்தான் போகிறது. நமது அரசியல் வாதிகளும் அவர்களிடமே கையூட்டு வாங்கிக் கொண்டு நன்றாக வாழத்தான் போகிறர்கள்.
நாமும் நம் நாடும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பது விளங்காத புதிராக இருக்கிறது. நாம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் அரசியல்வாதிகள் சிறப்புடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நாட்டை பற்றி எந்த கவலையும் இல்லை. நம்மைப் போன்ற பொது மக்களும் நமக்கென்ன என்று இருந்தால் அடுத்து சீனாக் காரன் நம் நாட்டை பிடித்தாலும் கேக்க ஆள் இருக்காது. அன்பர்களே இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது நிச்சயமாக நடக்கத்தான் போகிறது. நமது அரசியல் வாதிகளும் அவர்களிடமே கையூட்டு வாங்கிக் கொண்டு நன்றாக வாழத்தான் போகிறர்கள்.
Friday, June 18, 2010
சென்னையின் அறிமுகம்
சென்னையின் அறிமுகம்:
நான் பொதுவாக எனது rotation work style காரணமாக ஒவ்வொரு மாதம் முடிவிலும் சென்னை வருவதால் cabin luggage மட்டுமே கொண்டு வருவேன். இந்த முறை தவறுதலாக கனமான luggage உடன் வந்துவிட்டேன். சென்னை airport இல் conveyer இல் கொஞ்சம் நேரம் நிற்க வேண்டியதாகிவிட்டது. அப்போதுதான் கவனித்தேன் அந்த பகுதி முழுவதும் சுவர் மூலைகளில் எல்லா இடத்திலும் paan barag எச்சில் கறை. இது நிச்சயமாக அதி காலையில் வந்திறங்கும் பயணிகள் வேலையில்லை. அங்கே வேலை செய்யும் ஊழியர்கள்தான் நினைத்த இடத்தில், நின்ற இடத்தில் எச்சில் துப்பி அசிங்கம் செய்து வைக்கின்றனர். இதை அங்கிருக்கும் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எத்தனை வெளி நாட்டினர் வந்து போகுமிடம்? முதலில் சென்னை வந்து இறங்கியவுடன் நம் கண்ணில் படும் இந்த அசிங்கமே இவர்களுக்கு உறைக்கவில்லை என்றால் வெளியில் சாலைகளிலும் பொது இடங்களிலும் இவர்களும் இவர்களின் மற்றத் தமிழ் சகோதரர்களும் இறைக்கும் எச்சில் கோலத்தை எங்கே போய் சொல்லுவது? இவனுங்கள்ளெல்லாம் எப்போது திருந்த போகிறார்கள். நாம எதாவது சொன்னால் கச்சை கட்டிக் கொண்டு கூட்டம் சேர்த்து மல்லுக்கு நிற்கத்தான் தெரியும்.
நான் பொதுவாக எனது rotation work style காரணமாக ஒவ்வொரு மாதம் முடிவிலும் சென்னை வருவதால் cabin luggage மட்டுமே கொண்டு வருவேன். இந்த முறை தவறுதலாக கனமான luggage உடன் வந்துவிட்டேன். சென்னை airport இல் conveyer இல் கொஞ்சம் நேரம் நிற்க வேண்டியதாகிவிட்டது. அப்போதுதான் கவனித்தேன் அந்த பகுதி முழுவதும் சுவர் மூலைகளில் எல்லா இடத்திலும் paan barag எச்சில் கறை. இது நிச்சயமாக அதி காலையில் வந்திறங்கும் பயணிகள் வேலையில்லை. அங்கே வேலை செய்யும் ஊழியர்கள்தான் நினைத்த இடத்தில், நின்ற இடத்தில் எச்சில் துப்பி அசிங்கம் செய்து வைக்கின்றனர். இதை அங்கிருக்கும் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எத்தனை வெளி நாட்டினர் வந்து போகுமிடம்? முதலில் சென்னை வந்து இறங்கியவுடன் நம் கண்ணில் படும் இந்த அசிங்கமே இவர்களுக்கு உறைக்கவில்லை என்றால் வெளியில் சாலைகளிலும் பொது இடங்களிலும் இவர்களும் இவர்களின் மற்றத் தமிழ் சகோதரர்களும் இறைக்கும் எச்சில் கோலத்தை எங்கே போய் சொல்லுவது? இவனுங்கள்ளெல்லாம் எப்போது திருந்த போகிறார்கள். நாம எதாவது சொன்னால் கச்சை கட்டிக் கொண்டு கூட்டம் சேர்த்து மல்லுக்கு நிற்கத்தான் தெரியும்.
Subscribe to:
Posts (Atom)